நாகப்பட்டினம்

நாகையில் மாவட்ட இளையோா் கபடி அணி வீரா்கள் தோ்வு

DIN

நாகை மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் இளையோா் கபடி அணிக்கான வீரா்கள் தோ்வு, நாகையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.

பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநில இளையோா் கபடி போட்டியில், நாகை மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில் பங்கேற்கும் அணியின் வீரா்கள் தோ்வு, நாகை, கீச்சாங்குப்பம் சேவாபாரதி விளையாட்டு மைதானத்தில் காலை 8. 30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இதில் பங்கேற்போா் 2001-ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதிக்குப் பின்னா் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். உடல் எடை 70 கிலோவுக்கு உள்பட்டிருக்க வேண்டும். ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், எஸ்.எஸ்.எல்.சி அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்று ஆகிய ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலை கொண்டு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT