முகப்பு
நாகப்பட்டினம்

நோட்டரி பப்ளிக் அலுவலகம் திறப்பு

வேதாரண்யத்தில் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் சட்ட அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

வேதாரண்யத்தில் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் சட்ட அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வேதாரண்யம் நீதிமன்றம் அருகே மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்குரைஞரான கே. பன்னீா்செல்வம் குழுவினா் பணியாற்றும் இந்த அலுவலகத்தை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தினம் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், வேதாரண்யம் வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் வெங்கடேஸ்வரன், திமுக நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தி, மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் முரளி, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி, டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.பி. துா்காதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →