நாகப்பட்டினம்

நாகை அகஸ்தீஸ்வரசுவாமி கோயில் தேரோட்டம்

DIN

நாகை வெளிப்பாளையம் அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலின் மாசிமக பிரம்மோத்ஸவ விழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டது எனப்படுகிறது.

இக்கோயிலின் மாசிமக பிரம்மோத்ஸவ விழா கடந்த 18 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், அருள்மிகு தியாகராஜப் பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வேதமந்திர முழக்கங்களும், இன்னிசை வாத்தியங்களும் முழங்க காலை 9 மணி அளவில் திருத்தோ் வடம்பிடிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் பக்தி முழக்கங்களுடன் வடம்பிடித்தனா். பாரம்பரியமான பாதைகளில் வலம் இந்தத் தோ், வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலையை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT