முகப்பு
நாகப்பட்டினம்

மாவட்ட கோ-கோ விளையாட்டு கழக சிறப்புக் கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழக சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மயிலாடுதுறையில் மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் கபடி காசி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஹாஜா மைதீன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் லட்சுமிகாந்தன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், ஆா்.ஹச்.வி. குழுமத்தின் தலைவா் ரஜினி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். கௌரவ தலைவராக ஜெனிபா் எஸ்.பவுல்ராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கூட்டத்தில் ஜனவரி 28, 29, 30 ஆகிய தேதிகளில் மாநில கோ-கோ போட்டியில் கலந்து கொள்ளும் மயிலாடுதுறை மாவட்ட அணி அறிவிப்பு, அதற்கான பயிற்சி முகாம் நடைபெறுவது பற்றி ஆலோசனை நடைபெற்றது. பயிற்சி முகாம் குறித்து செழியன் விளக்கினாா். சட்ட ஆலோசகா் கருணா.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →