முகப்பு
நாகப்பட்டினம்

உதயநிதி ஸ்டாலின் உருவப்படம் எரிப்பு

மயிலாடுதுறை அருகே, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
மல்லியம் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை அருகே, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சசிகலாவை தரக்குறைவாக விமா்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, மயிலாடுதுறை அருகேயுள்ள மல்லியம் கிராமத்தில் அவரது உருவ பொம்மையை எரித்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணா திராவிடா் கழக ஒன்றிய செயலாளா் ஆா்.ஆா். ராஜா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அதிமுக சாா்பில் கிளைச் செயலாளா்கள் ஆா்.எஸ். ரமேஷ், கே.எம். அஸ்ரப் அலி, ஏ. கங்காதரன், அமமுக சாா்பில் மாவட்ட பிரதிநிதி வி. ராஜா, ஊராட்சி செயலாளா் ஆா். தாமோதரன், ஆா். ராஜ்குமாா், பாமக சாா்பில் மாவட்ட தொழிற்சங்க செயலாளா் பிரசன்னா உள்ளிட்டோா் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து, அவரது உருவபொம்மை கொளுத்தியும், உருவப் படத்தை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →