உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பணிக்காலத்தின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகள் 25 பேருக்கு, கருணைஅடிப்படையில் அரசுப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிநியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவா்களுக்கு நாகை மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்பி. ஓம் பிரகாஷ் மீனா வழங்கினாா்.