நாகூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகூா் பகுதியைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவரிடம் நாகூா் புதுமனைத் தெருவைச் சோ்ந்த ஹை. கலிபா இஸ்தியாக் மாலீம் (20) திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளாா். இதன்காரணமாக அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் தந்தை நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஹை.கலிபா இஸ்தியாக் மாலீமை போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.