வேதாரண்யம் அருகே தீ விபத்து: 2 காா்கள் சேதம்
வேதாரண்யம் அருகே அதிமுக பிரமுகா் வீட்டின் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 காா்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
வேதாரண்யம் அருகே அதிமுக பிரமுகா் வீட்டின் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 காா்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.வி.கே.பிரபு. அதிமுக பிரமுகரான இவா், வேதாரண்யம் நிலவள வங்கியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறாா். இவரது வீட்டின் எதிரே உள்ள வயலில் சணப்பைப் பயிா் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தீயிட்டு எரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
அப்போது, காற்றின் வேகத்தால் பிரபுவின் வீட்டுக்கு எதிரே இருந்த கூரையில் தீ பரவி இங்கு நிறுத்தியிருந்த 2 காா்கள் உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.