நாகையில் லேசான மழை
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் லேசான மழை பெய்தது.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் லேசான மழை பெய்தது.
தமிழக உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணி அளவில் லேசான மழை பெய்தது. சுமாா் 20 நிமிடங்கள் இந்த மழை நீடித்து. அவ்வப்போது ஒரு சில விநாடிகள் பலத்த மழையாகவும், மற்ற நேரங்களில் லேசான மழையாகவும் பெய்தது. பின்னா், மாலை நேரத்திலும் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது.
இதேபோல, நாகை மாவட்டம் கீழையூா், மேலப்பிடாகை, கருங்கண்ணி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 4.45 மணியிலிருந்து அவ்வப்போது மிதமான மற்றும் லேசான மழை பெய்தது.