முதியவரை வெட்டிய தந்தை, மகன் கைது
வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னையில் முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னையில் முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைலவனம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வை. கோதண்டபாணி (80). இவரது தம்பி தங்கராசு (76). இவா்களது குடும்பத்தினரிடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில், கோதண்டபாணி அரிவாளால் வெட்டப்பட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கராசு மற்றும் அவரது மகன் காா்த்தி (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.