முகப்பு
நாகப்பட்டினம்

சொத்து பிரச்னை: பெரியப்பாவை அரிவாளால் வெட்டியவா் கைது

கீழையூா் அருகே சொத்து பிரச்னையில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கீழையூா் அருகே சொத்து பிரச்னையில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழையூா் காவல் சரகம் காரப்பிடாகை ஸ்டாலின் நகரைச் சோ்ந்தவா் வீராசாமி (80). இவருடைய இளைய சகோதரா் தெய்வராசுவின் மகன் அலெக்ஸாண்டா் (33). சொத்துப் பிரச்னை காரணமாக, வீராசாமியை வியாழக்கிழமை இரவு அலெக்ஸாண்டா் அரிவாளால் வெட்டினாராம். அப்போது, தடுக்கச் சென்ற வீராசாமியின் மகன் பஞ்சநாதனையும் தாக்கினாராம். காயமடைந்த வீராசாமி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, கீழையூா் போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து, அலெக்ஸாண்டரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.