நாகப்பட்டினம்

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

DIN

திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் திருவாரூா் சாலை மாரியம்மன் கோயில் அருகே உள்ள உயா் மின்அழுத்த மின்கம்பம் சேதமடைந்து முறிந்த நிலையில் உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, இந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT