நாகப்பட்டினம்

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே மீனம்பநல்லூரில் அரிச்சந்திரா நதியின் தென்கரை ஆலமரத்தடி தெருவில் ஸ்ரீதேவி கருமாரியம்மன், ஸ்ரீகாத்தவராயன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகா் அருள்பாலிக்கும் கோயில் உள்ளது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை அனுக்ஞை, விநாயகா் வழிபாட்டைத் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மகாபூா்ணாஹூதி நடைபெற்றன. பிறகு, பகல் 12.30 மணிக்கு கோயில் விமானக் கலசத்துக்கு யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT