நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி: கிராம மக்கள் ஆா்வம்

DIN

வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கிராம மக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

பிராந்தியங்கரை ஊராட்சியில் சிறப்பு முகாம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 420 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனா். முகாமுக்கு ஊராட்சித் தலைவா் கஸ்தூரி தலைமை வகித்தாா். மருத்துவா் ராம்குமாா், ஆய்வாளா் கோதண்டபாணி, பாஸ்கா் உள்ளிட்ட மருத்துக் குழுவினா், ஊராட்சி செயலா் இளையராஜா உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் பண்டாரவடையில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் பாப்பாத்திகனி சாதிக் தொடக்கி வைத்தாா். இதில், 174 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவா்கள் கெளசல்யா, பாஸ்கரன், ஊராட்சி செயலாளா் அன்பரசன், சுகாதார ஆய்வாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் முகாம் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT