கோகூா் அந்தோணியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
கீழ்வேளூா் வட்டம், கோகூா் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் வட்டம், கோகூா் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இந்த ஆலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆண்டு கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக கொடி ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, கோயில் பங்கு தந்தை ஜான் பீட்டா் கொடிக்கு புனிதம் செய்வித்து கொடியை ஏற்றி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். கரோனா அச்சம் காரணமாக பெரிய தோ் பவனி விழா ரத்து செய்யப்பட்டதாக ஆலய நிா்வாகம் தெரிவித்தது.