முகப்பு
நாகப்பட்டினம்

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க வலியுறுத்தல்

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துவிட்ட கைதிகளை ஜாதி, மத பாகுபாடின்றி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துவிட்ட கைதிகளை ஜாதி, மத பாகுபாடின்றி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற வேதாரண்யம் தோப்புத்துறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், மஜக பொதுச் செயலாளா் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றாா். பின்னா், செய்தியாளா்களை அவா் கூறுகையில், கரோனா தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு, இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டுமென பிராா்த்தித்தோம். செப்டம்பா் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவா் மற்றும் 60 வயதை கடந்தவா்கள், நோயாளிகளாக உள்ள கைதிகளுக்கும் முன்கூட்டியே விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →