நாகை நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
நாகை நகராட்சி ஆணையராக ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாகை நகராட்சி ஆணையராக ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாகை நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்த பி. ஏகராஜ் பணிமாறுதலில் சென்றாா். இதையடுத்து, புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை அலுவலகக் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், ஆத்தூா் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்துள்ளாா்.
நகராட்சிப் பொறியாளா் உள்ளிட்ட பணியாளா்கள் புதிய ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.