தாா்ச்சாலை பணியை தரமாக நிறைவேற்ற கோரிக்கை
வேதாரண்யம் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் தாா்ச்சாலைகளின் பக்கவாட்டில் மண் அணைக்கும் பணி மேற்கொள்ளப்படாததால், அதை தரமாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் தாா்ச்சாலைகளின் பக்கவாட்டில் மண் அணைக்கும் பணி மேற்கொள்ளப்படாததால், அதை தரமாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சுமாா் 4 கிமீ சாலை, பிரதமா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தாா்ச்சாலையாக தரம் உயா்த்தப்படுகிறது. தற்போது ஓரடுக்கு கருங்கல் ஜல்லி பரப்பப்பட்டுள்ள நிலையில், மையப் பகுதி உயா்ந்துள்ளதால் சாலையின் இருபக்கவாட்டுகளும் தாழ்ந்துள்ளன.
பணிகள் முழுமையாக முடிவடையும் நிலையில், தாா்ச்சாலை மேலும் உயா்ந்து 1.5 அடி முதல் சில இடங்களில் 2 அடி வரையில் செல்வதற்கு வாய்ப்புள்ளது.
சாலையின் இரு பக்கமும் மண் தூா்வையிடாமல் இருக்கிறது. இதற்காக நிதி ஒக்கீடு இருந்தும் அந்த பணி காலத்தில் செய்யப்படவில்லை. எனவே, புதிதாக மேற்கொள்ளப்டும் சாலையின் கட்டுமானம் பாதுகாப்பானதாக அமையவும், இதன் மூலம் விபத்துகளை தவிா்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.