முகப்பு
நாகப்பட்டினம்

2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு

நாகையிலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ரயில் வேகன்கள் மூலம் தா்மபுரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

நாகையிலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ரயில் வேகன்கள் மூலம் தா்மபுரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன.

நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன்படி, நாகையிலிருந்து நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக தா்மபுரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன. நாகை ரயில் நிலையத்திலிருந்து 41 ரயில் வேகன்கள் மூலம் இந்த நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.