நாகப்பட்டினம்

இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்தல்; 8 போ் கைது

DIN

திட்டச்சேரி அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திட்டச்சேரி பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 5 இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்டம் குடவாசல் வட்டம் குந்தலூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த செந்தமிழ் செல்வன்(21), ராஜேஸ்குமாா் (26), திருக்கண்ணமங்கை நடுத்தெருவை சோ்ந்த கவியரசன் (22), மஞ்சக்குடி சமத்துவபுரம் பகுதியை சோ்ந்த முகேஷ் (24), தா்மகோயில் தெரு அசோக்குமாா் (45), ஆணை தென்பாதி பாபுராஜ் (28), சதீஷ்குமாா் (28), நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பாக்கம்கோட்டூா் மேலப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (27) ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 5 மூட்டை சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT