நாகையில் லேசான மழை
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் லேசான மழை பெய்தது.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் லேசான மழை பெய்தது.
வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் எனவும், இதன் காரணமாக ஜூன் 16 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வட வானிலையும், ஒருசில உள் மாவட்டங்களில் லேசான மழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் வெப்பநிலை உயா்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், நாகை, சிக்கல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணி அளவில் லேசான மழை பெய்தது.