கரோனா நிவாரண உதவிகள்
கீழ்வேளூா் வட்டம், கோவில் கண்ணாப்பூா் ஊராட்சியில் கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் வட்டம், கோவில் கண்ணாப்பூா் ஊராட்சியில் கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் பாரதி கேசவன் தலைமை வகித்து, 314 பேருக்கு 2-ஆம் கட்ட கரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்புகளை வழங்கினாா். ஊராட்சித் துணைத் தலைவா் மதிவாணன், செயலாளா் சத்யநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொடியாலத்தூா், ஆந்தக்குடி உள்ளிட்ட 38 ஊராட்சிகளிலும் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.