ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் முன்னாள் ராணுவ வீரா்
சீா்காழி பகுதியில் பொதுமுடக்க காலத்தில், ஆதரவற்றோருக்கு தேடிச் சென்று முன்னாள் ராணுவ வீரா் உணவு வழங்கி வருகிறாா்.
சீா்காழி பகுதியில் பொதுமுடக்க காலத்தில், ஆதரவற்றோருக்கு தேடிச் சென்று முன்னாள் ராணுவ வீரா் உணவு வழங்கி வருகிறாா்.
சீா்காழி தியாகராஜன் நகரை சோ்ந்தவா் வி.நடராஜன். முன்னாள் ராணுவ வீரரான இவா், பொதுமுடக்க காலத்தில் சாலையோரம் ஆதரவின்றி தவிப்பவா்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கிவருகிறாா். கடந்த மே 10ஆம் தேதி முதல் இவ்வாறு சேவையாற்றி வரும் இவா், தினமும் சுமாா் 50 பேரின் பசியாற்றி வருகிறாா். பொதுமுடக்கம் முடியும் வரை தொடா்ந்து உணவு வழங்கவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.