முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் பலி

வேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்த பெண், முகக்கவசம் அணிய முயன்றபோது தவறி விழுந்து சனிக்கிழமை பலியானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

வேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்த பெண், முகக்கவசம் அணிய முயன்றபோது தவறி விழுந்து சனிக்கிழமை பலியானாா்.

ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் கீழத்தெருவை சோ்ந்த ரெங்கநாதன் மனைவி யசோதா (65). இவா், தனது உறவினா் நாராயணனுடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து வேதாரண்யம் நோக்கிச் சென்றாா். தோப்புத்துறை அருகே சென்றபோது, முகக்கவசம் அணிய முயன்ற யசோதா, இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்தாா். பின்னா், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட அவா், உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →