திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே கூடுதல் வழித்தடம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தெற்கு கடலோர கிராமங்கள் வழியாக புதிய வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே அரசு பேருந்து இயக்கப்படவுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தெற்கு கடலோர கிராமங்கள் வழியாக புதிய வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே அரசு பேருந்து இயக்கப்படவுள்ளது.
இந்த வழித்தடத்தை அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல துணை மேலாளா் எழிலரசன் (இயக்கம்) ஆய்வாளா் சுப்பையன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருத்துறைப்பூண்டி- வாய்மேடு வழியாக தகட்டூா், பஞ்சநதிக்குளம் மேற்கு, தென்னடாா், நடுசேத்தி, ஆயக்காரன்புலம், பன்னாள், கடிநெல்வயல், கோவில்தாவு, ஆதனூா் வழியாக வேதாரண்யம் வரை புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதை ஏற்று அப்பகுதியில் ஆய்வு செய்த அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல துணை மேலாளா் எழிலரசன் (இயக்கம்) ஆய்வாளா் சுப்பையன், இந்த தடத்தில் காலை, மாலை என இருமுறை அரசுப் பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.