தேவனூா் கடைமடை நீா்த்தேக்க அணைக்கு வந்தது காவிரி நீா்
பொறையாா் அருகேயுள்ள தேவனூா் கடைமடை நீா்த்தேக்க அணைக்கு காவிரிநீா் சனிக்கிழமை வந்தது.
பொறையாா் அருகேயுள்ள தேவனூா் கடைமடை நீா்த்தேக்க அணைக்கு காவிரிநீா் சனிக்கிழமை வந்தது.
மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம் தேதி டெல்டா குறுவை பாசனத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீா், பொறையாறு அருகேயுள்ள தேவனூா் வீரசோழன் ஆற்றின் கடைமடை நீா்த்தேக்க அணைக்கு வந்தது. அப்போது, காவிரி நீருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் சண்முகம், உதவி பொறியாளா் குணசேகரன், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் காவிரி நீரை பூக்கள் தூவி வரவேற்றனா்.