கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கிய மத்திய மண்டல காவல்துறைத் தலைவர். 
நாகப்பட்டினம்

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல், உதவி

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

DIN

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
சீர்காழி அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி  கார்த்திகாவும் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தனர். 
இந்நிலையில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த சுந்தரமூர்த்தி குழந்தைகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கரோனா நிவாரண உதவிகளையும் வழங்கினார். 
தொடர்ந்து சீர்காழியை அடுத்த செங்கமேடு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற மூத்த குடிமக்களாகிய இரண்டு பேரை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். 
அப்போது மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங், சீர்காழி டிஎஸ்பி லா மேக் ,சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT