படப்பிடிப்பின் நடுவே... சுற்றுலாவுக்குச் சென்ற எதிர்நீச்சல் குழு!
எதிர்நீச்சல் தொடரின் நடிகர், நடிகைகள் சுற்றுலா சென்றுள்ளது குறித்து...
எதிர்நீச்சல் தொடரின் நடிகர், நடிகைகள் குழுவாகச் சுற்றுலா சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 (எதிர்நீச்சல் தொடர்கிறது) தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே நடித்து வருகின்றனர். இத்தொடரில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, தேவதர்ஷினி, ஸ்ரீஜா ஆகிய 4 பேர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை கனிகாவுக்கு பதிலாக ஈஸ்வரி பாத்திரத்தில் தற்போது நடிகை ஸ்ரீஜா நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்குத் திருமணம் முடிந்து வந்த மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளையுமே மையப்படுத்தி எதிர்நீச்சல் -2 எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரின் டிஆரிபியை தக்கவைப்பதற்காகவும், ரசிகர்களை கவரும் வகையிலும் புதிய பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இத்தொடரின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் நடுவே நடிகர்கள் அனைவரும் குழுவாகச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர்.
இதில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, தேவதர்ஷினி, கமலேஷ் உள்பட குழுவினர் அனைவரும் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு குழுவாக நடனமாடி, விடியோ, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
இது தொடர்பான படங்களை நடிகை ஹரிபிரியா இசை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் கோடை சுற்றுலாவையும் முடித்துவிட்டதாக ரசிகர்கள் பலர் இதில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.