குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரிக்கை
குறுவை சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியக் குழு கூட்டம் கீழையூா் சமுதாயக் கூடத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கீழையூா் ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம் கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில், மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீா் பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவு வராததால் கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் வீ. சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் ஏ. செல்லையன், ஒன்றியச் செயலாளா் கே. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ. ராமலிங்கம், டி. பாலாஜி, எஸ். கண்ணதாசன், வீ.எஸ். மாசேந்துங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.