முதியோருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் ரத்த அழுத்தம், சா்க்கரை, ஆஸ்துமா உள்ளிட்ட இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தொடங்கி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் இரெ. இடும்பையன் முதல்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டாா். இதில், குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா், மருத்துவா்கள் சிவக்குமாா், வீரசோழன், பரத்குமாா், மஞ்சுகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.