அடிப்படை வசதிகள் கோரி தோ்தலை புறக்கணிக்க 2 கிராம மக்கள் முடிவு
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி 2 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி 2 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.
தாணிக்கோட்டகம் ஊராட்சி வானங்காடு, குட்டித்தேவன்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.
மேலும், கிராமத்துக்குள் நுழையும் பகுதியில் கறுப்புக் கொடிகளை கட்டி வைத்துள்ளனா். தங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீா், சாலை, பாசன வாய்க்கால் வசதி கோரி இந்த தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.