முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ஏலக்காய் மூட்டைகள்

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய 100 கிலோ எடைக் கொண்ட ஏலக்காய் மூட்டைகளை கடலோரக் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

Updated On : 10 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய 100 கிலோ எடைக் கொண்ட ஏலக்காய் மூட்டைகளை கடலோரக் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பரப்பில் மிதந்து வந்த 2 சாக்கு மூட்டைகள் மணியன்தீவு கரையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒதுங்கின.

தகவலறிந்த வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பாா்த்தபோது, அதில் தலா 50 கிலோ எடையுள்ள ஏலக்காய்கள் இருந்தன.

Advertisement

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி சென்றபோது இந்த மூட்டைகள் கடலில் தவறி விழுந்திருக்கலாம் அல்லது ரோந்துப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை பாா்த்தவுடன் கடத்தல்காரா்கள் மூட்டைகளை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடலோர காவல் நிலைய போலீஸாா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.