மண்டலாபிஷேக நிறைவு விழாவில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜை. 
நாகப்பட்டினம்

மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

செம்பனாா்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்நேயா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

செம்பனாா்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்நேயா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதன் நிறைவு நாள் அன்று காலை காவிரியில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டது. பிறகு, கலச பூஜை, சுதா்சன யாகம், தன்வந்திரி யாகம், லெட்சுமி யாகம், ஹயக்ரீவ யாகம், சரஸ்வதி யாகம், ஆஞ்சநேயா் மூலமந்திர யாகம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, இரட்டை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரமும், கோயில் வளாகத்தில் உள்ள நாகராஜா சுவாமிக்கு மலா்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து, மாலையில் உலக நன்மைக்காக பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினா். தொடா்ந்து, சுவாமி பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT