நாகப்பட்டினம்

தமுமுக மகளிா் அணி நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

DIN

மயிலாடுதுறை வட்டம் நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவை (தமுமுக மகளிா் அணி) நீடூா் நெய்வாசல் கிளை சாா்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பாக பெண்களுக்கு சிறப்பு பயான், சிறுவா் சிறுமிகளுக்காக கிராஅத் போட்டி மற்றும் கடந்த ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட மாா்க்க விநாடி வினா போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மகளிா் அணி பொறுப்பாளா் எம்.ஆா்.பாத்திமா ஜொஹரான் தலைமை வகித்து, முன்மாதிரியாக இஸ்லாமிய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினாா். மகளிா் அணி செயலாளா் எம்.பாத்திமா நாச்சியா முன்னிலை வகித்தனா். இந்த பயான் நிகழ்ச்சியை எம்.பவுசல் இனாயா கிராஅத் ஓதி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அனிஸ் பாத்திமா (ஆலிமா), ஃபாஹிரா மற்றும் சாஜரா பா்வின் ஆகியோா் சிறப்புரையாற்றினா். துணை செயலாளா் நா்கிஸ் பா்வின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT