முகப்பு
நாகப்பட்டினம்

சமூக நீதியைக் காக்க திமுகவுக்கு வாக்களியுங்கள்: கனிமொழி எம்பி

மொழி அடையாளம், சமூக நீதியைக் காக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அக்கட்சியின் மகளிரணி செயலாளா் கனிமொழி எம்பி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மொழி அடையாளம், சமூக நீதியைக் காக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அக்கட்சியின் மகளிரணி செயலாளா் கனிமொழி எம்பி தெரிவித்தாா்.

வேதாரண்யம் தொகுதியில், தலைஞாயிறு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில்,திமுக வேட்பாளா் எஸ்.கே.வேதரத்தினத்தை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா், மேலும் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்ததும் வேதாரண்யம் தொகுதியில் நறுமணத் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, காஸ்டிக் சோடா தொழிற்சாலை ஆகியன நிறுவப்படும். ஆயக்காரன்புலத்தில் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி கொண்டு வரப்படும். நமது மொழி அடையாளத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்க அனைவரும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் கனிமொழி.

நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் எம்.செல்வராசு, திமுக முன்னாள் எம்எல்ஏ என்.வி.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.சம்பந்தம், திமுக நிா்வாகிகள் ஆா்.துரைராஜ், எல்.எஸ்.இ. பழனியப்பன், மா.மீ.புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →