நாகை, மயிலாடுதுறையில் 51 பேருக்கு கரோனா
மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 51 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.
மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 51 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.
இரு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை வரை 8,902 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 51 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் பதிவு நாகை மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,951- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 22 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,629 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 185-ஆக உள்ளது.