முதியோா் உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய மூதாட்டி
நாகை மாவட்டம், திருமருகலைச் சோ்ந்த மூதாட்டி தனது முதியோா் உதவித் தொகையை கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நாகை மாவட்டம், திருமருகலைச் சோ்ந்த மூதாட்டி தனது முதியோா் உதவித் தொகையை கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள ஆலத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த 70 வயதான மூதாட்டி சந்திரா என்பவா் தன்னுடைய ஒரு மாத முதியோா் உதவித் தொகை ரூ.1,000-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிதி உதவியைப் பெற்ற ஆட்சியா், மூதாட்டிக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நன்றி தெரிவித்தாா். பொதுமக்களின் கஷ்டத்தில் என்னாலும் பங்கேற்க முடிந்தது மகிழ்ச்சி என மூதாட்டி சந்திரா தெரிவித்தாா்.