முகப்பு
நாகப்பட்டினம்

மரத்திலிருந்துதவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நாகூா் அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

நாகூா் அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகூா் அடுத்த உத்தமசோழபுரம் கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் நா. கலியபெருமாள் (37). விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், மகன்கள் கேட்டதால், நுங்கு பறிப்பதற்காக கலியபெருமாள், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள பனைமரத்தில் ஏறியுள்ளாா். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கலியபெருமாள் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாகூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.