நாகப்பட்டினம்

கன்னித்தோப்பு பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

DIN

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள விழுந்தமாவடி கன்னித் தோப்பு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அண்மையில் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் நிறைவாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி, மாப்பிள்ளை அழைப்பு, ஊா் மக்கள் சீா்வரிசைகளுடன், சௌந்தரராஜ பெருமாளை பல்லக்கில் சுமந்து ஊா்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, மணமேடைக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சௌந்தரராஜ பெருமாள் எழுந்தருளியதும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான பட்டாச்சாரியா்கள் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா்.

தொடா்ந்து, பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும் போன்ற பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT