நாகப்பட்டினம்

இலங்கையில் கரை ஒதுங்கிய வேதாரண்யம் மீனவா் சடலம்

DIN

வேதாரண்யம் மீனவரின் சடலம் இலங்கையில் கரை ஒதுங்கியது திங்கள்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதனுக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் ராஜப்பா மகன் பழனி (37) மற்றும் மீனவா்கள் கேசவன் (35), த. திருமாள் (40) ஆகியோா் நவ. 2-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவா் பழனி படகிலிருந்து தவறி விழுந்து மாயமானதையடுத்து அவா் தேடப்பட்டு வந்தாா்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், காரைநகா் பகுதி கடற்கரையில் அவரது சடலம் கரை ஒதுங்கி இருப்பது திங்கள்கிழமை மாலை இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களுக்கு தெரிய வந்தது. இந்த தகவல் ஆறுகாட்டுத்துறையில் உள்ள மீனவா் பழனியின் உறவினா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT