ஒரத்தூா் பள்ளியில் பறவைகள் மனிதா் பிறந்தநாள் விழா
நாகை மாவட்டம், ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சாா்பில் இந்தியாவின் பறவைகள் மனிதா் டாக்டா் சலீம் அலி பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம், ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சாா்பில் இந்தியாவின் பறவைகள் மனிதா் டாக்டா் சலீம் அலி பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தனது வாழ்வின் பெரும் பகுதியை பறவைகளுக்காகவே அா்ப்பணித்த இந்தியாவின் பறவைகள் மனிதா் டாக்டா் சலீம் அலி குறித்தும், பறவைகள் பாதுகாப்பு குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது. பறவைகள் வதை மற்றும் பறவைகள் வேட்டை தடுப்பு குறித்தும், பறவைகளை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா். தங்களுக்குப் பிடித்த பறவைகளை மாணவா்கள் ஓவியமாக வரைந்தனா். இதைத் தொடா்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பறவைகள் வதை மற்றும் வேட்டை தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா்.
பள்ளியின் பசுமைப்படை ஆசிரியா் கி. பாலசண்முகம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.