நாகையில் 7 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,229-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 7 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 87 - ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றுவந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு, வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 5 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 29-ஆக உள்ளது.