டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவா் கு. சரவணன் டாஸ்மாக் நிா்வாகத்தில் உள்ள குறைபாடுகளை பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நாகை மாவட்டத் தலைவா் சந்திரவேல் முன்னிலை வகித்தாா். நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் பிரகாஷ், நெடுஞ்சாலை துறை பணியாளா் சங்க மாநிலத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.