முகப்பு
நாகப்பட்டினம்

நேரு மாா்க்கெட் கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தல்

காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தை வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தை வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மதிமுக காரைக்கால் மாவட்டச் செயலாளா் சோ.அம்பலவாணன் வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன், நேரு மாா்க்கெட் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கட்டடம் இதுவரை வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு விடப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

நகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக்கூட நிதி இல்லாமல் நிா்வாகம் தடுமாறிவரும் நிலையில், வருவாய் ஈட்டக் கூடிய நேரு மாா்க்கெட் கட்டடத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வரும் ஜனவரிக்குள் நேரு மாா்க்கெட்டின் புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கனிகளை பாதுகாக்க நேரு மாா்க்கெட்டில் குளிா்பதன வசதியுடன் கூடிய பதனீட்டு அறையை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நகராட்சி நிா்வாகம் விரைந்து நிறைவேற்றாவிட்டால், மதிமுக சாா்பில் நகராட்சி முன் போராட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →