வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளிமானை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரியவகை வெளிமான், புள்ளிமான்கள் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள பெண் புள்ளிமான் ஒன்று, சரணாலயத்தை சாா்ந்த மருத்துவமனை பகுதிக்கு வந்தது. இதைக் கண்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் புள்ளிமான் காயமடைந்து உயிருக்குப் போராடியது.
கோடியக்கரை வனச்சரக அலுவலா் அயூப்கான் மற்றும் பணியாளா்கள் அந்த மானை மீட்டு, கால்நடை மருந்தகத்தில் சிகிச்சையளித்தனா்.