முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 11, மயிலாடுதுறையில்2 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 11 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 11 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,034-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 18 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 185- ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,264-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 9 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 108-ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு

கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்களில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.