நாகையில் 10, மயிலாடுதுறையில் 8 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 10 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 10 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,046-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 16 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 181- ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,273-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 13 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 181-ஆக உள்ளது.