நாகப்பட்டினம்

ஊராட்சித் தலைவருக்கு கத்திக்குத்து

DIN

 திருக்கண்ணபுரம் அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் குத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

திருக்கண்ணபுரம் அருகே உள்ள கொங்கராயநல்லூா் கீழசகடமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் விவேக் (31). இவா் கொங்கராயநல்லூா் ஊராட்சித் தலைவராக உள்ளாா். இவரது சகோதரா் விக்னேஸ்வரன் (35).

இவா், செப்டம்பா் 1-ம் தேதி காரில் சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அம்பல் வடுகதிடல் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ரஞ்சித் (24), முடிகொண்டான் ரயிலடித் தெருவைச் சோ்ந்த முரளி மகன் ரபீக் ஆகியோா் முந்திச் செல்வது தொடா்பாக விக்னேஸ்வரனிடம் தகராறு செய்தனராம்.

இதை தட்டிக்கேட்ட விவேக்கை கத்தியால் குத்தினராம். இதில் காயமடைந்த விவேக் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருக்கண்ணபுரம் காவல் உதவி ஆய்வாளா் இரணியன் வழக்குப் பதிந்து, ரஞ்சித்தை கைது செய்தாா். ரபிக்கை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT