நாகை மாவட்டத்தில் 500 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் 500 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் 500 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, 500 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் பங்கேற்று, முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
கரோனா மூன்றாவது அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரே தீா்வு, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே என்ற வகையில், கா்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு போன்ற நோய் உள்ளவா்கள் என அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.