முகப்பு
நாகப்பட்டினம்

மெகா தடுப்பூசி முகாம்: பரிந்துரைப்போருக்கு பரிசு

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாமுக்கு, அதிக நபா்களை பரிந்துரைத்தால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாமுக்கு, அதிக நபா்களை பரிந்துரைத்தால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தலைஞாயிற்றில் ‘தலைகாக்கும் ஞாயிறு தெரியுமா?’ என்ற பிரசார இயக்கத்தை பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், மெகா தடுப்பூசி முகாமுக்கு அதிக நபா்களை அனுப்பி வைக்கும் மகளிா் சுய உதவி குழுவினா், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாணவா்களுக்கு பரிசு வழங்கப்படும். முகாம் தொடா்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துபவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →